முந்தானை முடிச்சு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் பயில்வான்.இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் துணை கதாபாத்திரம் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.இவர் நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பு இவருக்கு எப்பவும் இருக்கும்.மேலும் கவுண்டமணி செந்தில் காமெடிகளுக்குள் இவரும் நுழைந்து காமெடி செய்த பல நகைச்சுவை காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்று இவர் கூறிய வசனம் இன்று வரை பலராலும் உபயோகிக்கப்பட்டு வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வருகிறார்.மேலும் சில சினிமா தகவல்களையும் மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.இந்த கருத்து தெரிவிப்பில் பல நடிகர்களை பற்றி அவதூறாக பேசுவதாக இவர் மீது பெரும் குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.இதுகுறித்து இவரிடம் கேட்ட பொழுது என்னிடம் ஆதாரம் உள்ளது.ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பேசமாட்டேன்,ஆதாரம் இருக்க போய் தான் கூறுகிறேன் யாரவது என்னிடம் வந்து கேட்டால் நான் ஆதாரத்தினை காண்பிக்க தயார் என அறிவித்து இருந்தார்.இவர் பேசும் விஷயங்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தும் இவரிடம் இதுவரை யாரும் இவர் கூறிய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னை பற்றி அவதூறாக பேசுவதாக நேற்று பயில்வான் ரங்கநாதனை தொடர்புகொண்டு பாடகி சுசித்ரா நேற்று கேள்வி மேல் கேள்வி வறுத்தெடுத்தார்.இதுகுறித்து அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜா ராணி ஆல்யா மானாஸாவிடம் கேட்கப்பட்டது,அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது,இது தப்புன்னு தான் நான் சொல்லுவேன்,மற்ற துறைகளிலெல்லாம் நடைபெறத்தான் செய்கிறது,இது சினிமா துறை என்பதால் வெளிவந்துள்ளது,எல்லாரும் மனிதர்கள் தான்,எல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் ,அதை வெளிக்கொண்டு வருவது தப்பு,பிறரை பற்றி கூறும் பொது நமக்கே கஷ்டமாக தான் இருக்கும் என அவரது கருத்தை தெரிவித்துள்ளார்
Embed video credits : SOUTHERN TAMIL
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in