The Indian Times

உங்கள் வாய்மொழி கேட்டால் கடலும் அமைதியாகும்..அன்னபூரணி வெளியிட்ட புது பாடல் | AnnaPoorani Arasu Amma

அன்னப்பூரணி அரசு அம்மா இந்த பெயரை கேட்காத ஆட்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த பெண்மணி பிரபலம். தீடீரென ஒரு நாள் இந்த பெயர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. அவரது ஆன்மீக வீடியோக்களும் வைரல் ஆகத் தொடங்கின. ஒரு மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து, பட்டு புடவை, கழுத்தில் நகைகள் என காரில் வந்து இறங்கும் அன்னபூரணிக்கு மாலை மரியாதை செய்யப்பட்டு இருக்கையில் அமர்ந்தபடி குதிரை ஓட்டுவது போன்று குதிக்கிறார். அவரது ஆன்மீக சிஷ்யைகள் ஆனந்த வெள்ளத்தில் ஆடுகின்றனர்.

Advertisement

இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பெண்ணின் கணவரான அரசு என்பவருடன் ஏற்ப்பட்ட கள்ளக்காதல் பஞ்சாயத்தின் காரணமாக சொல்தெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதை நெட்டிசன்கள் எப்படியோ கண்டுபிடித்து அன்னபூரணியை கலாய்த்து தள்ளினர். பிறகு ஒரு Youtube சேனலில் பேட்டியளித்த அன்னபூரணி தான் ஒரு சக்தி எனவும், என்னை உணர மட்டுமே முடியும் என்றும் விளக்கமளித்தார். கேள்வி கேட்ட நிரூபரை கோப குரலில் உரக்க கத்தினார். இவை அனைத்துமே இணையவாசிகளுக்கு ஒரு பொழுது போக்காக இருந்தது.

Advertisement

சில காலம் அமைதியாக இருந்து வந்த அன்னபூரணி, மீண்டும் ஒரு ஆன்மீக பாடலை வெளியிட்டுள்ளார். முகநூல் பக்கத்தில் தினமும் ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டும் வீடியோ பதிவேற்றிக் கொண்டும் இருக்கும் இவர், அன்னபூரணி அரசு அம்மா என்று ஒரு பாடலை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த காமெடியான வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in