புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் அர்னாவ்.இவரின் இயற்பெயர் நைனா முகமது.சினிமாவுக்காக தனது பெயரை அர்னவ் என்று ஸ்டைலாக மாற்றிக்கொண்டுள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.சன் டிவியில் ஒளிபரப்பாகிய சக்தி என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து பல நாடகங்களில் நடித்துள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் செல்லம்மா என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இவர் மீது தற்போது செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா புகார் கொடுத்துள்ளார்.திவ்யா கர்நாடகத்தினை சேர்ந்தவர்.தமிழில் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.அதன்படி அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் திவ்யாவை விரட்டி விரட்டி காதலித்துள்ளார்,திவ்யாவுக்கு அர்னவ் மீது காதல் வரவே இருவரும் காதலித்து வந்துள்ளனர் ஒரு கட்டத்திற்கு மேல் அர்னவ் மதம் மாறினால் தான் கல்யாணம் என திவ்யாவிடம் கூறவே அவரும் மதம் மாறியுள்ளார்.மேலும் இருவரும் திருமணமும் செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் அர்னவ் மீது திவ்யா புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில் பிற நடிகையுடன் தொடர்பில் அவர் உள்ளதாகவும்,இதனால் தன்னை துன்புறுத்துவதாகவும் புகார் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிறையில் இருந்து வெளியே வந்த அர்னவ் தனது நீதி வேண்டும் என கூறி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in