பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.தந்தையை போல பிரபல நடிகர் ஆக வேண்டும் என கனவுடன் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.பிரபல நடிகரின் மகன் என்பதால் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தது அர்ஜுன் விஜய்க்கு.இவர் 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார்.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும் இவர் கடின உழைப்பு இவரது படங்களில் தெரியும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி இருந்தார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.அண்மையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படம் பெரும் வரவேற்பினை பெற்றது
தற்போது அருண் விஜய் இயக்குனர் குமரவேலன் இயக்கத்தில் சினம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை மூவி ஸ்லைட் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக பல்லக் லால்வானி நடித்துள்ளார்.இவர்களுடன் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்து அசத்தியுள்ளார்.செப்டெம்பர் 16 இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தந்தை விஜயகுமார் உடன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அதில் குஷி படத்தில் விஜயகுமார் பேசிய வசனம் ஒன்றை தந்தையை போல அச்சு அசல் பேசி நடித்து காண்பித்து அசத்தியுள்ளார்
Embed video credits : BEHINDWOODSTV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in