இனி சாப்டியான்னு யார் கேப்பா என்னை.. அருவி படப்பிடிப்பில் நடந்த சோகம்

‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது.தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கதாநாயகனாக ,நகைச்சுவை நடிகராக சினிமாவையே கலக்கியவர் லிவிங்ஸ்டன்.இவருக்கென அப்பொழுதே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போதும் சில படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

இனி சாப்டியான்னு யார் கேப்பா என்னை.. அருவி படப்பிடிப்பில் நடந்த சோகம் 1

விளம்பரம்

லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா, ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.அப்பாவை போலவே சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என சின்னத்திரைக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார் ஜோவிதா. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி நாடகத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு இந்த நாடகத்தில் நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இதனால் தொடர்ந்து நாடகத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

இனி சாப்டியான்னு யார் கேப்பா என்னை.. அருவி படப்பிடிப்பில் நடந்த சோகம் 2

விளம்பரம்

மேலும் நாடகத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் நடனத்திலும் அதிகம் ஆர்வம் உள்ளதால் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் அருவி சீரியலில் ஜோவிதாவிற்கு மேக்கப் போட்டு வருபவர் தான் ராம பிரபா,இவருக்கு நேற்று படப்பிடிப்பில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது உயிரிழந்தார்,இதுகுறித்து அருவி கதாநாயகி ஜோவிதா கூறியதாவது,உன்னை போல அன்பானவர் உயிருடன் இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை , சாப்டியா என்று பாசமாக இனி யார் என்னை கேட்பார் என மனக்கஷ்டத்துடன் கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment