தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.ஒவ்வொருநாளும் போர்க்களமாக மாறி வருகிறது பிக் பாஸ் வீடு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் தான் அசல் கோலார்.ராப் பாடகரான இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது,இதன் மூலம் இன்னும் உயரம் செல்லலாம் என நுழைந்த அவருக்கு ஆரம்பத்தில் மக்கள் சப்போர்ட் இருந்தது.இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல அசல் பெண்களை அதிகம் தொட்டு பேசி ,அவர்களிடம் தவறாக நடந்துகொள்வது போல தெரிந்ததால் மக்கள் ஆத்திரமடைந்தனர்.
பின்னர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர்.தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பேட்டி ஒன்று அளித்துள்ளார்,அந்த பேட்டியில் அவர் மீது வைக்கப்பட்டுள்ள புகாருக்கு பதில் கூறியதாவது,மக்கள் பார்க்க கூடிய இடத்துல நான் அப்படி இருக்க கூடாதுன்னு தோணுச்சு,நான் தப்பா ஏதும் பண்ணல,எனக்கு தெரியல நான் எல்லாருகிட்டயும் இருப்பது போல் தான் இருந்தேன்,இது எனக்கு ஒரு பாடம்.இது எனக்கு தப்புன்னு தெரியல,இப்போ என்னோட பழக்க வழக்கம் தப்புதான் மாத்திக்கணும்
Embed video credits : Galatta Tamil
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in