அம்மா பாக்யாவுக்கு FULL SUPPORT கொடுத்து கோபியை வெளுத்து வாங்கிய எழில் | BAAGYALAKSHMI SERIAL

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

அம்மா பாக்யாவுக்கு FULL SUPPORT கொடுத்து கோபியை வெளுத்து வாங்கிய எழில் | BAAGYALAKSHMI SERIAL 1

விளம்பரம்

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தினை யாருக்கும் தெரியாமல் கட்டி காப்பாத்தி வருகிறார் கோபி. ஒரு உண்மையான குடும்பத்தில் இதே போல் பிரச்சனை நடந்தால் எப்படி இருக்குமோ அதேபோல உண்மையாகவே இந்த குடும்பத்தினை சீரியல் என்று நினைக்காமல் அதையும் தாண்டி பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.இந்நிலையில் கோபியின் மனைவி ராதிகாவின் தோழி பாக்யா என தெரியவரவே ராதிகா கோபியை விட்டு விலகி மும்பை செல்ல திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில் கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.அங்கு அவரை பார்க்க ராதிகா வரவே இவர்களுக்கு இடையேயான உறவு பாக்கியாவுக்கு தெரியவந்துவிடுகிறது.இதனால் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் பாக்யா.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

அம்மா பாக்யாவுக்கு FULL SUPPORT கொடுத்து கோபியை வெளுத்து வாங்கிய எழில் | BAAGYALAKSHMI SERIAL 2

விளம்பரம்

வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியாவை தற்போது குழந்தைகளுக்காக வீட்டிற்கு அழைத்து வந்துள்ள கோபி.வீட்டிற்கு வந்த பாக்கியா கோபியை விவாகரத்து செய்வதற்கு மும்முரமாக உள்ளார்.தற்போது கோபி பாக்கியாவிடம் இது என்னுடைய வீடு, நான் தான் மாதம் மாதம் பணம் கொடுக்கிறேன் என கோபமாக பேசவே,இதனை கேட்ட அவரது மகன் கடுப்பாகி தந்தையை வெளுத்து வாங்கியுள்ளார்,என் வீடு என் வீடுன்னு சொல்லுறீங்க,தினமும் மூணு வேளைக்கு அம்மா சமையல் செஞ்சி கொடுத்தாங்களே அதுக்கு என்ன கணக்கு,என்ன சம்பளம் 3 பிள்ளைகளை பார்த்து பார்த்து வளர்த்தாங்களே எங்க அம்மா அவங்கள விட இந்த வீட்டு மதிப்பு ஒன்னும் பெருசு இல்லை சும்மா எல்லாத்தையும் பணத்தால கணக்கு போடாதீங்க.நீங்க கட்டுனது வெறும் கட்டடம் தான் எங்க அம்மா தான் வீடாக மாத்தினார்கள் என கூறி வெளுத்து வாங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment