பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய கோபி..தடுக்கும் மகள்…| BAAKIYALAKSHMI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.மூன்றாவது மகன் எழில் இயக்குனர் ஆக உள்ளார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய கோபி..தடுக்கும் மகள்...| BAAKIYALAKSHMI 1

விளம்பரம்

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தினை யாருக்கும் தெரியாமல் கட்டி காப்பாத்தி வருகிறார் கோபி. ஒரு உண்மையான குடும்பத்தில் இதே போல் பிரச்சனை நடந்தால் எப்படி இருக்குமோ அதேபோல உண்மையாகவே இந்த குடும்பத்தினை சீரியல் என்று நினைக்காமல் அதையும் தாண்டி பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.இந்நிலையில் கோபியின் மனைவி ராதிகாவின் தோழி பாக்யா என தெரியவரவே ராதிகா கோபியை விட்டு விலகி மும்பை செல்ல திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில் கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.அங்கு அவரை பார்க்க ராதிகா வரவே இவர்களுக்கு இடையேயான உறவு பாக்கியாவுக்கு தெரியவந்துவிடுகிறது.இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்துவிடுகிறார்

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய கோபி..தடுக்கும் மகள்...| BAAKIYALAKSHMI 2

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சி புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவில் விவாகரத்து செய்த பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார் கோபி.பாக்கியாவும் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறார்.அவரது மகள் தடுக்கவே நீ அம்மா கூட இருக்க போறியா இல்ல அப்பா கூட இருக்க போறியா என கேட்டுள்ளார்..மகளை பிரித்து கூட்டு போய்விடுவாரோ பாக்கியா என கோபி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment