உன் வாழ்க்கையில நான் வந்திருக்க கூடாது… குடும்பத்திற்காக காதலை விட்டுக்கொடுத்த எழில்… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

உன் வாழ்க்கையில நான் வந்திருக்க கூடாது... குடும்பத்திற்காக காதலை விட்டுக்கொடுத்த எழில்... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

உன் வாழ்க்கையில நான் வந்திருக்க கூடாது... குடும்பத்திற்காக காதலை விட்டுக்கொடுத்த எழில்... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

இந்நிலையில் பாக்கியா இருக்கும் வீட்டை என் வீடு என கோபி உரிமை கோருகிறார்,இதனால் கடுப்பாகிய எழில் வீட்டை மொத்த காசு கொடுத்து தானே வாங்குவதாக கூறி சவால் விடுகிறார்.இதில் வீட்டை வாங்க எழில் தனது இயக்கத்தில் உருவாகி வந்த கதையை விற்க முடிவு செய்கிறார்,முன்னதாக இப்படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் தனது மகள் வர்ஷினியை எழில் கல்யாணம் செய்துகொண்டால் படத்தினை எடுக்கலாம் அல்லது நிறுத்திவிடலாம் என கூறியிருந்தார்.இந்நிலையில் எழில் அவரிடம் பேசி தனது கதையை விற்க அனுமதி கோருகிறார்.இதனால் எழிலை விட கூடாது என ஏதோ திட்டம் போட்டு படத்தினை திரும்ப இயக்கலாம் என கூறுகிறார்.புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் , எழில் பாட்டி வர்ஷினியை கல்யாணம் செய்துகொள்ள கூறி எழில் காலில் விழவே உடனே அவரும் குடும்பத்திற்காக காதலை விட்டுக்கொடுக்கிறார்,அமிர்தாவை நேரில் சந்தித்து உன் வாழ்க்கையில் நான் வந்திருக்க கூடாது என கூறி அவரை விட்டு பிரிந்து செல்கிறார்,இதனால் அமிர்தா கலங்கி கதறி அழுதுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits – VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment