பாக்கியாவுக்கு கல்யாணம் நடப்பது போல கனவு கண்டு பயந்து எழுந்த கோபி… வறுத்தெடுத்த ராதிகா… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பாக்கியாவுக்கு கல்யாணம் நடப்பது போல கனவு கண்டு பயந்து எழுந்த கோபி... வறுத்தெடுத்த ராதிகா... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.இந்நிலையில் நானும் இனி பாக்கியா வீட்டில் இருப்பேன் நான் தான் கோபி பொண்டாட்டி இனி நம்மளும் இந்த வீட்டில் இருப்போம் என பையுடன் கிளம்பி வருகிறார்.இறுதியாக ராதிகா கோபியுடன் பாக்கியா வீட்டிலேயே தங்குகிறார்.இதனால் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்கியாவுக்கு கல்யாணம் நடப்பது போல கனவு கண்டு பயந்து எழுந்த கோபி... வறுத்தெடுத்த ராதிகா... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது,ப்ரோமோவில் பாக்கியாவுக்கும் பழனிசாமிக்கும் திருமணம் நடைபெறுவது போல கனவு கண்டு பயந்து எழுகிறார்,உடனே எழுந்த ராதிகா என்ன ஆச்சு என கேள்வி கேட்கவே ,பாக்கியாவுக்கு கல்யாணம் நடப்பது போல கனவு கண்டேன் என கூறுகிறார்,இதனால் கடுப்பாகிய ராதிகா அவளுக்கு கல்யாணம் ஆனால் உங்களுக்கென்ன என கேள்வி கேட்டு கிழித்துள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed Video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment