The Indian Times

பாக்கியா கூட நீங்க எப்படி PHONE-ல பேசலாம்… கோபியிடம் கடும் கோவப்பட்ட ராதிகா | baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடருக்கு பல குடும்பத்தரசிகள் ஆதரவு அளித்து வெற்றிபெற செய்து வருகின்றனர்.ஒரு பெண்ணின் வாழ்வில் கணவனால் துயரம் எந்த வயதிலும் ஏற்படலாம் அதனை அந்த பெண் எப்படி சமாளிக்கிறார் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார் இந்த சீரியலின் இயக்குனர்.இதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அவ்வளவு அதிகமாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

கதாநாயகி பாக்கியாவை திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று,குழந்தைகளுக்கு திருமணம் ஆகிய நிலையில் அவரின் கணவர் கோபி தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு பாக்கியாவை உதறி தள்ளுகிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் கோபி என் பெயருக்கு வரும் கொரியர்களை எனது வீட்டிற்கு கொண்டு வர சொல்லு என கூறவே அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் பாக்கியா.ராதிகா உடனே நீங்க எப்படி பாக்கியா கூட பேசலாம்,வீட்டில் வேறே ஆளே இல்லையா என கோவப்பட்டு செல்கிறார்.இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : VIJAY TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in