இனியா வருவா என தூங்காமல் வாசலை பார்த்துகொண்டிருக்கும் பாக்கியா… பார்க்கவே பாவமா இருக்கு | Baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.பிற சேனல்களை போல தரமான தொடர்களை ஒளிபரப்பி டிஆர்பியில் அடித்து துவம்சம் செய்து வருகிறது விஜய் டிவி.இந்த சேனலில் பல நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பாக்கியலட்சுமி நாடகத்திற்கு தனி மவுசு உள்ளது ரசிகர்களிடம் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இனியா வருவா என தூங்காமல் வாசலை பார்த்துகொண்டிருக்கும் பாக்கியா... பார்க்கவே பாவமா இருக்கு | Baakyalakshmi 1

விளம்பரம்

பாக்கியலட்சுமி தொடரின் கதாநாயகி கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார்.இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இனியா வருவா என தூங்காமல் வாசலை பார்த்துகொண்டிருக்கும் பாக்கியா... பார்க்கவே பாவமா இருக்கு | Baakyalakshmi 2

விளம்பரம்

இந்நிலையில் கோபி தனது மகள் இனியாவையும் உடன் அழைத்து சென்றுவிட்டார். இனியாவும் அம்மா வேண்டாம் அப்பாதான் வேண்டும் என கோபி செய்த செயலை மறந்து அவருடன் சென்று விட்டார்.இது பாக்கியாவுக்கு பெரும் வேதனையினை அளித்துள்ளது. பாக்கியா இரவு தூங்காமல் நீண்ட நேரம் இனியா வந்துவிட மாட்டாளா என வாசலை பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

https://www.youtube.com/watch?v=CEm9XmKZqlQ&ab_channel=VijayTelevision

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISON

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment