விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ஹனிமூனுக்காக மனைவியை கூட்டிக்கொண்டு கொடைக்கானல் வருகிறார்.அங்கு பாக்கியாவும் குடும்பத்துடன் வருகிறார்.
கொடைக்கானலில் இருந்து வீடு திரும்பிய கோபி,பாக்கியா வீட்டுக்கு எதிர் வீட்டுலயே அவரை கடுப்பேத்துவது போல ராதிகாவுடன் குடியேறியுள்ளார்.தற்போது ராதிகாவுடன் வாழ்க்கை நடத்தி வரும் கோபி வேலை முடிந்து வந்த உடனே ராதிகாவிடம் காபி வேண்டும் என கூறவே அவர் நானும் குடிக்கணும் ஆன்லைனில் ஆர்டர் போடுகிறேன் என கூறியுள்ளார்.இது கோபிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
https://www.youtube.com/watch?v=1YnyTpNMc_4&ab_channel=VijayTelevision
Embed video credits : vijay television
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in