விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். தற்போது இந்த சீரியல் சூடுபிடிக்க தொடங்கி அசத்தி வருகிறது
ராதிகா உடன் தனிக்குடுத்தனம் வந்த கோபி ராதிகாவுக்கு சமைக்க தெரியாததால் சாப்பாட்டுக்கு அவதிப்படுகிறார்,மேலும் தான் காபி பிரியர் என்றும் அடிக்கடி காபி குடிப்பேன் அதை நீ தான் போட்டு தரவேண்டும் என ராதிகாவிடம் கெஞ்சியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது,மனைவிக்கு துரோகம் செய்த கணவர் நன்றாக வாழ்ந்ததே கிடையாது என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Embed video credits : VIJAY TELEVISION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in