The Indian Times

ரவுண்டு கட்டி திட்டிய ரசிகர்கள்…வீடியோ பதிவிட்டு கலங்கிய பாக்யலட்சுமி கோபி…அப்படி என்னதான் நடந்தது?

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு கலக்கியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,நல்லா நடிச்சாலும் தப்பு,நடிக்கா விட்டாலும் தப்பு நிறைய பேரு திட்டி மெசேஜ் பன்றாங்க,அதயெல்லாம் அழிச்சிட்டேன்.இப்போ மறுபடியும் தொடங்கி இருக்கு.கடவுள் எனக்கு திறமை கொடுத்திருக்கார்,அதை வெளியே காமிச்சாலும் தப்பு ,சத்தியமா வாழ்க்கையே பத்தி புரியலைங்க,கொடுத்த வேலையே ஒழுங்கா செய்றேன் அந்த நம்பிக்கைல வாழ்க்கை ஓடிட்டு இருக்கு என கூறி மிகுந்த மனக்கவலையுடன் பதிவிட்டுள்ளார்.

Embed video credits : Behindwoodstv

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

Seralathan Subramanian — 21/5/2022

Just get on Mr Gopi. Those scolding may be acting like honest by pointing at actor.