விஜய் டிவிக்கு கும்புடு போட்டு வேறே சேனல் தாவிய பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விஜய் டிவிக்கு கும்புடு போட்டு வேறே சேனல் தாவிய பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா 1

விளம்பரம்

தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விஜய் டிவிக்கு கும்புடு போட்டு வேறே சேனல் தாவிய பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா 2

விளம்பரம்

தற்போது பாக்கியலட்சுமி தொடரில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில்,இவர் ஜீ தமிழ் சேனலில் புதிய நாடகத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த தொடரில் கதாநாயகனாக சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மிர்ச்சி செந்தில் நடிக்க உள்ளார்,அவருக்கு தங்கையாக ரித்திகா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இதனால் இவர் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு வெளியேறுவாரா என்பது தெரியவில்லை,விரைவில் இந்த புதிய தொடர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment