The Indian Times

ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… ஆனா கடைசியா வச்சாங்க பாரு ஆப்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.

Advertisement

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி கண்ணம்மாவின் சொந்த ஊருக்கே வருகிறார். சொந்த ஊருக்கு வந்து தனது மனைவியை அழைத்து செல்ல பல வழிகளை மேற்கொண்டும் இறுதியாக கண்ணம்மா பாரதிக்கு விவாகரத்து கொடுக்கிறார்.

கண்ணம்மாவுக்காக சண்டைக்கு சென்ற பாரதி அடிபட்டு சுயநினைவை இழந்து பழசயெல்லாம் மறந்துவிடுகிறார்.கண்ணம்மாவின் தீவிர முயற்சியால் பாரதிக்கு மீண்டும் பழைய நினைவுகள் திரும்பியுள்ளது.பாரதி கண்ணம்மாவிடம் வந்து,உன்னை திரும்ப சென்னை அழைத்து போவேன் என சவால் விட்டு தான் வந்தேன்,ஆனால் உன் மனசை ஜெயிக்க முடியலை,உன்னைவிட்டு பிரிய போகிறேன் என கூறி பாரதி செல்லவே,கண்ணம்மா பின்னாலையே அழுதுகொண்டு பாரதியை தேடி செல்கிறார்.இறுதியில் இருவரும் ஒன்றாகி உள்ளனர்.ஆனால் தொடரும் போட்டு இந்த வார எபிசோடை முடித்துள்ளனர்,பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்த பிறகும் சீரியல் இன்னும் முடியவில்லையா என எப்பொழுது முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in