“எல்லார்கிட்டயும் குழப்பத்த உண்டாக்குறாரு!” அண்ணாச்சி மறைந்து நிற்பதை கவனிக்காமல் கொளுத்தி போடும் அபிஷேக்!

பல ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்போது துவங்கப்பட்டு வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த முதல் வாரத்தில் எந்த ஒரு பெரிய சண்டையும் வீட்டில் இல்லை. தாமரை செல்விக்கும் , நமிதாவிற்கும் மன கசப்பு ஏற்பட்டது உண்மை. ஆனால் சிறிது நேரத்திலேயே அது சரியாகி விட்டது. பிறகு நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எதற்காக வெளியேறினார் என்ற காரணம் பலர்குக்கும் தெரியவில்லை. இதை தொடர்ந்து இந்த வரம் முதல் நாளில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது.

"எல்லார்கிட்டயும் குழப்பத்த உண்டாக்குறாரு!" அண்ணாச்சி மறைந்து நிற்பதை கவனிக்காமல் கொளுத்தி போடும் அபிஷேக்! 1

விளம்பரம்

அதில் கடைசி வரை விட்டு கொடுக்காமல் விளையாடி , முதல் வார தலைவர் பதவியை ஏற்றார் தாமரை செல்வி. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார நாமினேஷன் நடைபெற்றது. அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் இசைவாணியை குறிவைத்து உள்ளது போல் காணப்பட்டது. இந்நிலையில் இந்த வார லக்சுரி படஜெட் டாஸ்க் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அணைத்து போட்டியாளர்களும் கதையை கூறி விட்டனர். இந்நிலையில் இன்று விஜயதசமியை முன்னிட்டு பிக்பாஸ் கருத்துக்கணிப்பு நடக்கிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment