The Indian Times

“எங்க வீட்ல ஒருவேளை சாப்பாடு மட்டும் தான்..” கண்கலங்கிய இசைவாணி BiggBoss 5 Promo

பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் துவங்கியுள்ளது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி . தமிழில் இந்த நிகழ்ச்சி இது வரை 4 சீசன்களை கடந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ் , இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே பல எதிர்பார்ப்புகளை கிளப்பியது. யார் யார் உள்ளே சொல்லப்போகிறார்கள் என்ற குழப்பம் அனைவரிடமும் இருந்தது.

Advertisement

இந்நிலையில் தற்போது எந்தெந்த போட்டியாளர்கள் உள்ளே செல்கிறார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளிவந்தது. இதில் முதலில் இசைவாணி சென்றார். அதன் பிறகு சீரியல் நடிகர் ராஜு, மதுமிதா , அபிஷேக் ராஜா , நமீதா மாரிமுத்து , பிரியங்கா , அபிநய் , பவானி ரெட்டி, சின்ன பொண்ணு , நடியா சங் , வருண் , இம்மான் அண்ணாச்சி , ஸ்ருதி , அக்ஷரா ரெட்டி , ஜக்கி பெர்ரி, தாமரை செல்வி , சிபி சந்திரன் , நிரூப் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். பலரும் எதிர்பார்க்காத விதமாக பல புதுமுகங்கள் இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதன் பிறகு நடப்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in