The Indian Times

ஊரே தீபாவளி கொண்டாடுது… நான் அனாதை ஆகிட்டனே என தவித்து போன பாரதி.. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்தொடர் பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் குடும்ப தலைவிகளின் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. குறைந்த அளவு சீரியல்களை ஒளிபரப்பினாலும் தரமான சீரியல்களை ஒளிபரப்ப தவறியதில்லை விஜய் தொலைக்காட்சி.வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வெண்பா பாரதி கல்யாணத்தினை தடுத்து நிறுத்தி,வெண்பா முகத்திரையை கிழித்தார் கண்ணம்மா. பின்னர் கணவர் பாரதி மேல் கடும் கோபமடைந்த கண்ணம்மா அவரை விட்டு விலகி செல்கிறார்

பாரதியை விட்டு அவரது அம்மா, கண்ணம்மா மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றுவிட்டனர்.தற்போது ஊரே தீபாவளி கொண்டாடும் பொழுது யாருமில்லாத அனாதையாக அமர்ந்து பழசை நினைத்து பார்த்து வருத்தப்பட்டு வருகிறார்.இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இனியாவது திருந்துங்க பாரதி என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=XuWR8PfmWe4&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in