நீயெல்லாம் கண்ணம்மா ரோலுக்கு செட்டே ஆக மாட்ட..முகத்துக்கு நேரே வந்த கமெண்ட்..புது கண்ணம்மா வினுஷா சொன்ன செய்தி..!!!

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் பாரதியாக நடிகர் அருணும், கண்ணம்மாவாக நடிகை ரோஷ்ணியும் நடித்து வந்தனர். மருத்துவரான கணவர் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவளை வெளியேற்றிவிட்டு தனிமையில் இருவரும் வாழ்ந்து வருவது போன்ற கதை. இப்போது பாரதி தனது தவறை உணர்ந்து கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரோஷ்ணி திடீரென பாரதி கண்ணம்மா நாடகத்தில் இருந்து தான் விலகி விட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ஏனெனில் அவரையும், அவரது நடிப்பையும் பலரும் விரும்பினர்.

நீயெல்லாம் கண்ணம்மா ரோலுக்கு செட்டே ஆக மாட்ட..முகத்துக்கு நேரே வந்த கமெண்ட்..புது கண்ணம்மா வினுஷா சொன்ன செய்தி..!!! 1

விளம்பரம்

ஆனால் தற்போது குக் வித் கோமாளி ஷோவில் குக்காக பங்கேற்றுள்ளார் ரோஷ்ணி. குக் வித் கோமாளி போன்ற புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வது அவருக்கு இன்னும் பிரபலத்தை ஏற்படுத்தி தரும். எனவே அவர் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருக்கக்கூடும் என்று பலர் அவரை விமர்சிக்கவும் செய்தனர். ஆனால் எது எப்படியாயினும் கண்ணம்மா கேரக்டரில் தொடர வினுஷா என்ற பெண்ணை பாரதி கண்ணம்மா்குழுவினர் அறிமுகம் செய்தனர். டிக்டாக்கில் பிரபலமான அவர் தோற்றம், நடிப்பு ஆகியவற்றில் ரோஷ்ணியைப் போலவே இருப்பதால் பலரும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நீயெல்லாம் கண்ணம்மா ரோலுக்கு செட்டே ஆக மாட்ட..முகத்துக்கு நேரே வந்த கமெண்ட்..புது கண்ணம்மா வினுஷா சொன்ன செய்தி..!!! 2

விளம்பரம்

ஆனால் தன்னுடைய பேட்டிகளில் பேசிய வினுஷா கண்ணம்மாவாக நடிக்க ஆரம்பித்த நாட்களில் பலரும் தன்னை விமர்சித்ததாகவும், முதல் நாள் சூட்டிங்கில் அவர் கண்ணம்மா ரோலுக்கு செட் ஆக மாட்டார் எனவும் அவர் முன்பே பலரும் கூறியுள்ளனர். ஆனால் அதையெல்லாம் கடந்து வினுஷா தற்போது வெற்றிகரமாக தனது நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். காலையில் சூட்டிங், இரவு ஐ.டி வேலை என தனது வாழ்க்கையை பற்றி அவர் சொல்லுவதை நீங்களே கேளுங்கள்…!!! Watch the below video

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment