வெளிநாட்டு நிகழ்ச்சியில் அர்த்தநாரிஸ்வரர் ஆக வேடம் அணிந்து வந்து அனைவரையும் அசத்திய BIGG BOSS நமீதா மாரிமுத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் திருநங்கையான நமீதா மாரிமுத்து.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதிக நாட்கள் வீட்டில் இருந்த்து மக்களை மகிழ்விப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நிலை சரி இல்லாமல் சில நாட்களிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.இவர் இருந்த கொஞ்ச நாட்களிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெரும் அறிமுகம் மக்களிடம் இவருக்கு கிடைத்தது.தற்போது திருநங்கைகள் நாங்களும் பிறர்க்கு சளைத்தவர்கள் இல்லை என எல்லா துறைகளிலும் கொடிகட்டி பறக்கிறார்கள்.விஜய் தொலைக்காட்சியும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக நமீதாவை நிகழ்ச்சியில் களம் இறக்கியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அடித்துக்கொண்டு உருளும் மாமியார் மருமகள்... தமிழா தமிழா ப்ரோமோ

வெளிநாட்டு நிகழ்ச்சியில் அர்த்தநாரிஸ்வரர் ஆக வேடம் அணிந்து வந்து அனைவரையும் அசத்திய BIGG BOSS நமீதா மாரிமுத்து 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தனது சோக கதைகளை கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார்.பல துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கு பிறகு இத்தகைய உயரத்தினை அடைந்துள்ளார் நமீதா. மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் போட்டியில் கலந்துகொண்ட முதல் இந்திய திருநங்கை என்ற பெருமையும் இவருக்கு உண்டு.இவர் நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் தனது கால்தடத்தினை பதித்துள்ளார்.இவர் மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

வெளிநாட்டு நிகழ்ச்சியில் அர்த்தநாரிஸ்வரர் ஆக வேடம் அணிந்து வந்து அனைவரையும் அசத்திய BIGG BOSS நமீதா மாரிமுத்து 2

விளம்பரம்

தற்போது இவர் வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அர்த்தநாரிஸ்வரர் ஆக வேடம் அணிந்து ரேம்ப் வாக் செய்து அனைவரையும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.பல ரசிகர்களும் இந்த வீடியோவில் நமீதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் தடைகளுக்கு பிறகு நமீதா இப்படி உயரம் சென்றிருப்பது பல திருநங்கைகள் மட்டுமில்லாமல் பல இளைஞர்களுக்கும் இவர் முன் உதாரணமாக திகழ்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment