இயக்குனர் மற்றும் நடிகர் ஆன பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனு.தந்தையை போல் தானும் நடிகராக வேண்டும் என சிறுவயதிலேயே படத்தில் நடிக்க தொடங்கினார் சாந்தனு.அதன்படி வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.ஆரம்பத்தில் சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும் சில வருடங்களாகவே சரியான கதைகள் இவர்க்கு அமையாததால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
மாஸ்டர் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்தார்.இப்படத்திலும் இவரது கதாபாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை.இருப்பினும் சாந்தனு விடாமுயற்சியை விடாமல் பிடித்துக்கொண்டு வெற்றிக்காக ஓடிவருகிறார்.
தற்போது இவர் மதயானை கூட்டம் என்று வெற்றிப்படத்தினை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ராவண கோட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்,மேலும் இவர்களுடன் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது
தற்போது இந்த தம்பதியினர் நேற்று தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர் அதே சமயம் பகத் பாசில் மற்றும் நஸ்ரியாவுக்கு திருமண நாள் என்பதால் இரண்டு ஜோடிகளும் ஒன்றாக திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in