இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ,மாபெரும் வரவேற்பினை பெற்ற படம் சந்திரமுகி.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.மேலும் இவர்களுடன் பிரபு,ஜோதிகா,நாசர் வடிவேலு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.வித்யாசாகர் இசையில் உருவாகி இருந்த இப்படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று அசத்தியது.பல நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது சந்திரமுகி.இன்றுவரை இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்று வரை இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதனை காண்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் வெளியாகி இருந்தது.இதுகுறித்து இயக்குனர் வாசு எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையுமே வெளியிடாமல் இருந்தார்.சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் லாரன்ஸ் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.இப்படத்தில் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்காமல் லாரன்ஸ் அவரது ஆசியுடன் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.ஏற்கனவே காஞ்சனா படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கூட்டி வைத்திருக்கும் லாரன்ஸ்க்கு தற்போது இந்த படத்தின் மூலமும் பெரும் ரசிகர்கள் கூட்டமும் உருவாக அதிக வாய்ப்புள்ளது.
தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பினை லைக்கா நிறுவனம் ஆனது வெளியிட்டுள்ளது.இப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார்.பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.இப்படத்தின் மீதமுள்ள நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in