51 வயதில் கள்ளக்காதல்..பாட்டியின் கள்ளக்காதலனால் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த சோகம்

நம் நாட்டில் பல விதமான சைக்கோ கொலையாளிகள் உண்டு. அதிலும் குறிப்பாக இளம் குழந்தைகளை இரக்கமே இல்லாமல் கொலை செய்யும் பயங்கரமான மனிதர்களும் உண்டு. அந்த வகையில் பாட்டியின் கள்ளக்காதலால் ஒன்றரை வயது பேரக்குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அந்த பயங்கர சம்பவத்தின் பிண்ணனியைப் பார்ப்போம். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 51 வயது ஜிக்ஸி. இவரது மகளுக்கு 2 குழந்தைகள் உள்ளது. மகள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் தனது இரு பேரக் குழந்தைகளையும் பாட்டி ஜிக்ஸி கவனித்து வருகிறார். ஜிக்ஸிக்கும் ஜான் பினோ என்ற இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

51 வயதில் கள்ளக்காதல்..பாட்டியின் கள்ளக்காதலனால் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த சோகம் 1

விளம்பரம்

வீட்டில் மருமகன் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகள் இருப்பதால் கள்ளக்காதலனை அடிக்கடி சந்திக்க முடியாத நிலையில் கொச்சியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இருவரும் ரூம் எடுத்து சந்தித்து உள்ளனர். அப்போது ஜிக்ஸி தனது இரு பேரக் குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் சண்டையிட்டுள்ளார். அதனால் குழந்தைகளை அறையிலேயே விட்டுவிட்டு பாட்டி ஜிக்ஸி வெளியில் சென்றுள்ளார். பாட்டி கோபத்துடன் செல்வதை பார்த்த குழந்தைகள் பீறிட்டு அழவே கடுப்பான ஜான் பினோ ஒன்றரை வயது குழ்தையை பாத்ரூமில் வாளியில் உள்ள தண்ணீரில் போட்டு வைத்துள்ளான். Youtube Video Code Embed Credits: Polimer News

51 வயதில் கள்ளக்காதல்..பாட்டியின் கள்ளக்காதலனால் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த சோகம் 2

விளம்பரம்

சிறிது நேரத்திற்குப் பிறகு சமாதானம் ஆகி உள்ளே வந்த ஜிக்ஸிக்கு தனது பேத்தி வாளியில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு எதுவும் நடக்காதது போல் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை அதனால் ரூமை காலி செய்கிறோம் என்று கூறிவிட்டு ஜிக்ஸியும், பினோவும் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில் முதலில் குழந்தை தண்ணீரில் விழுந்துவிட்டதாக கூறி மழுப்பினர். பிறகு கிடுக்குப்பிடி கேள்விகளால் ஜான் குழந்தையை தண்ணீரில் அழுத்தி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 51 வயதில் வந்த கள்ளக்காதலால் தனது மகள் வயிற்று பேத்தியின் உயிர் பறிபோனது பற்றி கவலைப்படாமல் கள்ளக்காதலனை காப்பாற்ற முயற்சி செய்த ஜிக்ஸியை காவல்துறை கைது செய்துள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment