வம்பில் சிக்கிய நடிகை சாய் பல்லவி…வலுக்கும் எதிர்ப்பு…நடிகை திவ்யா ஆதரவு

வாய்ப்புக்காக போராடி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையால் மட்டும் இன்று முன்னேறி உச்ச நடிகை ஆக உருவெடுத்துள்ளவர் நடிகை சாய் பல்லவி.மருத்துவர் ஆன இவர் சினிமாவின் மேல் கொண்டுள்ள காதலால் வாய்ப்பு தேட துவங்கினார்.இதனால் ஆரம்பத்தில் பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்த இவருக்கு இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீ

வம்பில் சிக்கிய நடிகை சாய் பல்லவி...வலுக்கும் எதிர்ப்பு...நடிகை திவ்யா ஆதரவு 1

விளம்பரம்

இவருக்கான சரியான வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.தற்போது தமிழ் தெலுங்கு என படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.அதன்படி தற்போது தெலுங்கில் நடிகர் ராணாவுடன் இணைந்து விராட பருவம் என புதிய படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார்.இப்படம் ஜூன் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்நேரம் பார்த்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சாய் பல்லவி.

கட்டாயம் படிக்கவும்  இன்றைய ஐபிஎல் ஆட்டத்தை காண வந்த திரை நட்சத்திரங்கள்

வம்பில் சிக்கிய நடிகை சாய் பல்லவி...வலுக்கும் எதிர்ப்பு...நடிகை திவ்யா ஆதரவு 2

விளம்பரம்

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தில் பண்டிட்டுகள் கொலை செய்திருப்பதை காட்டியிருப்பார்கள்,அதுபோல கொரோனா காலத்தில் மாடுகளை லாரிகளில் ஏற்றி செல்லும் இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என கூற சொல்லி தாக்குதல் நடத்தியதும் ஒன்று தான் இரண்டுமே தவறுதான் என தெரிவித்திருந்தார்.இந்த கருத்துக்கு சிலரிடம் இருந்து சாய் பல்லவிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதனால் பலர் சாய் பல்லவியை திட்டி தீர்த்து வருகின்றனர்.இந்நிலையில் இவருக்கு ஆதரவாக ட்வீட்டரில் நடிகை திவ்யா ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,சாய் பல்லவிக்கு மிரட்டல் விடுப்பதினை நிறுத்துங்கள்,அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு நல்ல மனிதனாக இருக்க சொன்னால் துரோகி என முத்திரை குத்திவிடுவார்கள்,ஆனால் ஹோலிமாரே என்று கூறினால் அவர்கள் ஹீரோ என்று சொல்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

வம்பில் சிக்கிய நடிகை சாய் பல்லவி...வலுக்கும் எதிர்ப்பு...நடிகை திவ்யா ஆதரவு 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment