இந்த வாரம் குக் வித் கோமாளி போட்டியில் இருந்து வெளியாகிய முக்கிய போட்டியாளர்… ரசிகர்கள் கடும் சோகம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த வாரம் குக் வித் கோமாளி போட்டியில் இருந்து வெளியாகிய முக்கிய போட்டியாளர்... ரசிகர்கள் கடும் சோகம் 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வருகிறது.கடந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார்.இரண்டாவதாக காளையன் மூன்றாவதாக ராஜ் ஐயப்பா வெளியேறியுள்ளார்.நான்காவதாக விஜே விஷால் வெளியேறியுள்ளார்.

இந்த வாரம் குக் வித் கோமாளி போட்டியில் இருந்து வெளியாகிய முக்கிய போட்டியாளர்... ரசிகர்கள் கடும் சோகம் 2

விளம்பரம்

கடந்த வாரம் நடைபெற்ற இம்மியூனிட்டி சேலஞ்சில் கலந்துகொண்ட ஷகீலா அதை வெற்றிபெற்றதால் தற்போது இந்த வாரம் ஆறு போட்டியாளர்களும் எலிமினேஷன் சுற்றுக்கு வருகை தந்துள்ளனர்.அதன்படி இந்த வாரம் இந்த நிகழ்ச்சியை விட்டு ஷெரின் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரம் குக் வித் கோமாளி போட்டியில் இருந்து வெளியாகிய முக்கிய போட்டியாளர்... ரசிகர்கள் கடும் சோகம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment