கூல் சுரேஷை தற்போது தமிழகத்தில் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு வைரலாகி பலராலும் இன்று அறியப்பட்டவர் ஆகினார்.இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.இவ்வாறு கருத்து தெரிவித்து தெரிவித்து இன்று பெரும் பிரபலமாக மாறியுள்ளார் கூல் சுரேஷ்.எந்த படம் வெளியானாலும் இவரின் கருத்தினை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.மேலும் இவ்வாறு பிரபலமாகியதில் படவாய்ப்பு அவர்க்கு வந்துகொண்டு உள்ளது.
இவர் ஒரு தீவிர டி ராஜேந்தர் மற்றும் சிம்பு ரசிகர் ஆவார்.இன்று சென்னையில் வேல்ஸ் கல்லூரியில் நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கு கூல் சுரேஷ் கண்களில் கண்ணீர் உடன் அழுதுகொண்டு வந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இவருக்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் இவரை விமர்சனம் செய்து வருகின்றனர்
Embed video credits : BEHINDWOODSTV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in