கூல் சுரேஷ் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது வெந்து தணிந்தது காடு படம் தான்.இவர் தான் இப்படத்திற்கு முதலில் ப்ரோமோஷன் செய்ய தொடங்கினார்.பல மாதங்களாக இப்படத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிம்புக்காக மட்டும் இதனை செய்து வந்தார்,இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.அந்த வரிசையில் தற்போது நீண்ட நாட்களாக இவர் எதிர்பார்த்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது
தற்போது இவர் கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் அவர் கூறியதாவது ,என் கார் கண்ணாடி உடைச்சதுக்கு நான் யாருகிட்டயும் நஷ்ட ஈடு கேட்கலை,சிம்பு சொன்னாரு திரையரங்கு வந்தா எனக்கு கூட வரவேற்பு கிடைக்குமான்னு தெரியல உனக்கு கிடைச்சிருக்கு தக்க வச்சிக்கோ என கூறினார்,என தெரிவித்துள்ளார்.சோசியல் மீடியாவில் பிரபலமாக இருந்தாலும் என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை வண்டி தவணை பணம் கொடுக்க முடியவில்லை என கூறி கதறி அழுதுள்ளார்
https://youtu.be/yrZNLVLFEB0?t=114
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in