விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Embed video credits : VIJAY TELEVISION
தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,
அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர்,முதல் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றார்.இரண்டாவது எலிமினேஷனில் இருந்து காளையன் வெளியேறியுள்ளார்.மூன்றாவது எலிமினேஷனில் ராஜ் ஐயப்பா வெளியேறியுள்ளார்.நான்காவதாக விஜே விஷால் வெளியேறியுள்ளார்.
இன்றைய வாரத்திற்கான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் அட்வான்டேஜ் வெற்றிபெற்ற விசித்திரா ஸ்ருஷ்டிக்கு வந்த மட்டனை தான் எடுத்துக்கொண்டு தனக்கு வந்ததை அவரிடம் கொடுத்துள்ளார்.இதனால் தனது சமையல் வீணாகிவிடுமோ என எண்ணி ஸ்ருஷ்டி அழுதுள்ளார்.
மேலும் தனக்கு மூன்றாவது முறையாக அதுவும் எலிமினேஷன் குக்கிங்கில் மாற்றி விடுவதாகவும் அழுதுள்ளார்.ஸ்ருஷ்டியை பார்க்க ரசிகர்கள் பாவமாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் ஸ்ருஷ்டியால் முடியும் எனவும் அவரை உற்சாக படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in