கேரளாவை சேர்ந்த பரத். சூப்பர் சிங்கர் சீசன் 4 மூலம் போட்டியாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.பல பாடல்களை பாடி நடுவர்களை மட்டுமில்லாமல் மக்களையும் கவர்ந்தார்.இவர் மேடையில் ஒவ்வொரு பாடலை பாடும் பொழுது இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பரத்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை.எத்தனை பேர் இவரை கலாய்த்தாலும் நின்ற இடத்தில் இருந்து வாங்குவார்.இதனால் மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவரை போன்ற ஒருவர் தான் தேவை என குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு கோமாளியாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தினார்.இந்த நிகழ்ச்சியில் முதல் வார எபிசோடுகளில் நெட்டிசன்கள் பரத்தை அதிகளவு வசை பாடினர்.சிலர் திட்டியும் வந்தனர்.ஆனால் எதை பற்றியும் கவலை இல்லாமல்,நான் செய்வதை செய்துகொண்டு தான் இருப்பேன் என தற்போது நகைச்சுவையில் பலரையும் சிரிக்க வைத்து சிறந்த கோமாளியாக வலம் வந்தார்.
தற்போது இவர் பல நிகழ்ச்சிகளிலும் பாடல் பாடி வருகின்றார்.தற்போது இவர் பாடல் பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பரத் குரலை ரசித்து கேட்டு சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றன.இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in