எதிர்பாராத விதமாக இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபலம்… ரசிகர்கள் சோகம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

எதிர்பாராத விதமாக இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபலம்... ரசிகர்கள் சோகம் 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின்,மைம் கோபி,விஜே விஷால் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷனாக கிஷோர் வெளியேறினார்.

எதிர்பாராத விதமாக இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபலம்... ரசிகர்கள் சோகம் 2

விளம்பரம்

இரண்டாவதாக காளையன் வெளியேறினார்,மூன்றாவதாக ராஜ் ஐயப்பா வெளியேறினார்.இந்நிலையில் கடந்த வாரம் இம்மியூனிட்டி சுற்று நடத்தப்பட்டு அதில் மைம் கோபி வெற்றிபெற்றார்.இந்த வார எலிமினேஷன் சுற்றில் நடுவர்களிடம் சமையலில் குறைவான வாக்குகளை பெற்று விஜே விஷால் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.இது பெரும் சோகத்தினை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment