கோலிவுட்டில் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று ஹாலிவுட் வரை சென்று அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான இவர், ஆரம்பத்தில் நடிக்க வந்த பொழுது உருவ கேலி செய்யப்பட்டார். ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் நடிப்பு திறமையால் என்று தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. வரிசையாக இவர் வாத்தி, நானே வருவேன் போன்ற அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இதில் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நானே வருவேன் படத்தை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கியிருக்கிறார்.இப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார்.அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் தனுஷ்.இவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது
தற்போது தனுஷ் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில் தனுஷ் காரில் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருக்கிறார்.அவர் வருவது தெரிந்து மாடியில் இருந்து ஒருவர் வீடியோ எடுக்க தனுஷ் உடனே அவருக்கு கை காண்பித்து செல்கிறார்.இந்த வீடியோ தற்போது ட்வீட்டரில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷை வெகுவாக பாராட்டி வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in