தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி 50 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குழாயடி சண்டை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்! சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை போடுவது வெளியே இருந்து காண்பவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றே தான் கூற வேண்டும்! அவ்வாறு மக்கள் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருப்பவர்களை சண்டை போடும் நேரத்தில் ரசித்து பார்த்தாலும், நியாயமாக விளையாடும் ஒருவரையே இறுதியில் வாக்குப்பதிவு மூலம் தேர்வு செய்வார்கள் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான்! வித விதமாக சண்டை போடும் தாமரை, கொளுத்தி போடும் அண்ணாச்சி, மாறி மாறி பேசும் பாவனி, பேசியே கொல்லும் பிரியங்கா, முகத்திரையை கிழிக்காமல் விளையாடும் ராஜு,சிபி,வருண், விளையாடாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கும் அபிநய் மற்றும் இன்னும் பலரை சொல்லி கொண்டே போகலாம்!

தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3 1

விளம்பரம்

அதுமட்டுமில்லாமல் மக்களால் வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்ததால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். போன போட்டியாளரே வந்துவிட்டால் என்ன செய்ய என்று மக்கள் சலித்துக்கொண்ட நேரம் தான் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக முதலில் விஜய் டிவியில் பிரபல நடன இயக்குனராக விளங்கும் மாஸ்டர் அமீர் மற்றும் சின்னத்திரை பிரபல சீரியல் நடிகர் மற்றும் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் வீட்டிற்குள் புது வரவாக வந்துள்ளனர், வேடிக்கையாக செல்லும் பிக் பாஸ் வீட்டில் இன்னும் எத்தனை சண்டைகள் வரப்போகிறது என்று நாம் பொருத்து இருந்து தான் காண வேண்டும்! விறுவிறுப்பாக செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது! அதை தற்பொழுது நீங்களும் கண்டு மகிழுங்கள்! Watch The Video Below!…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

4 thoughts on “தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3”

  1. என்னடா பேசற.அந்த பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது என்பது போல பிரியங்கா பேசற?.இரண்டு பிள்ளைக்கு அம்மா மற்றும் வயதில் பெரியவர் தாமரை.இவள் அவரை அக்கா என்று கூப்பிட்டு இப்ப எல்லாம் தாமரை என்று கூப்பிடுவது என்ன நியாயம்.பிரியங்கா ஒரு அசடு.

    Reply

Leave a Comment