வித்தியாசமான கதைகளை தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர் அருள்நிதி.இவர் நடிப்புக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்களை மகிழ்விக்க நினைப்பவர் இவர்.வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகனாக அறிமுகமாகியவர் அருள்நிதி.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தில் அலப்பறை செய்யாத கதாநாயகனாக எதார்த்தமாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.முதல் படத்திலேயே வெற்றி யாருக்கும் கிடைத்துவிடாது அது அருள்நிதிக்கு கிடைத்துள்ளது,அந்த வெற்றியை தக்க வைக்க அன்று முதல் தனது கதைகளில் வித்தியாசங்களை தேட தொடங்கினார் அருள்நிதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்பின் இவர் நடித்த மௌனகுரு படம் இவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது.அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாகிய டிமான்டி காலனி படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்று,முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.தற்போது தொடர்ந்து பல இயக்குனர்களின் புதிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார் அருள்நிதி.
அண்மையில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டி காலனி என்ற படத்தில் நடித்திருந்தார்,இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.தற்போது சுமார் 7 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது ,இப்படத்தினை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்,கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
Embed Video Credits : THINK MUSIC INDIA
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in