ரொம்ப மன உளைச்சலில் இருந்தேன் – வாத்தி இசைவெளியீட்டு விழா மேடையில் வருத்தப்பட்ட தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

ரொம்ப மன உளைச்சலில் இருந்தேன் - வாத்தி இசைவெளியீட்டு விழா மேடையில் வருத்தப்பட்ட தனுஷ் 1

விளம்பரம்

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது. தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாக உள்ளது.முதல் முறையாக தனுஷுக்கு இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் படம் இது ஆகும். இப்படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி

ரொம்ப மன உளைச்சலில் இருந்தேன் - வாத்தி இசைவெளியீட்டு விழா மேடையில் வருத்தப்பட்ட தனுஷ் 2

விளம்பரம்

இப்படத்தின் இசைவெளியிட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது,இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் வருகை தந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அவர் கூறியதாவது, வெங்கி அட்லூரி கொரோனா லாக் டவுன் போது இந்த கதையை என்னிடம் கூறியிருந்தார்.அந்த நேரத்தில் நான் வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்தேன்,எதாவது சொல்லி கதையை நிராகரித்துவிடலாம் என நினைத்தேன்,ஆனால் கதை எனக்கு பிடித்துவிட்டது என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment