சிவகார்த்திகேயனை கூட்டிக்கொண்டு எல்லா சேனலுக்கும் சென்றேன்..அவரை உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை-இயக்குனர் பாண்டிராஜ்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழக்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS ரட்சிதா மஹாலட்சுமியின் கண்ணை கவரும் போட்டோஷூட் புகைப்படங்கள்

சிவகார்த்திகேயனை கூட்டிக்கொண்டு எல்லா சேனலுக்கும் சென்றேன்..அவரை உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை-இயக்குனர் பாண்டிராஜ் 1

விளம்பரம்

மெரினா படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை தனது வசம் தக்க வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.இவர் படங்கள் தற்போது கோடிகளில் வசூல் சாதனை படைத்தது சக நடிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.பல ஆண்டுகளாக நடித்து வரும் எவராலும் இத்தகைய வசூலை குறுகிய காலகட்டத்தில் பெற முடியாத நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 10 வருடங்களில் அதனை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார்.காரணம் டாக்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பதால்.தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சீரியலில் மட்டும் தான் ஹோம்லி லுக்.. பொன்னி சீரியல் நாயகி வெளிநாட்டில் மாடர்ன் உடையில் கலக்கல்

சிவகார்த்திகேயனை கூட்டிக்கொண்டு எல்லா சேனலுக்கும் சென்றேன்..அவரை உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை-இயக்குனர் பாண்டிராஜ் 2

விளம்பரம்

இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.சிவகார்த்திகேயனை முதலில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாண்டிராஜ் தான்.அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,மெரினா படம் முடிந்து சிவகார்த்திகேயனை ப்ரோமோஷனுக்காக எல்லா சேனல்களும் நான் அழைத்து சென்றேன் ஆனால் அங்கு சிவகார்த்திகேயனை அனுமதிக்கவில்லை,உங்கள் படத்தில் இருந்து வேறு யாரை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள்,சிவகார்த்திகேயன் விஜய் டிவியை சேர்ந்தவர் அதனால் அனுமதி இல்லை என கூறியுள்ளனர்.இதனை பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.தற்போது சிவகார்த்திகேயன் பேட்டியளிக்கமாட்டாரா என பல தொலைக்காட்சிகள் ஏங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment