தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் மகேஷ் பாபு.இவரது சகோதரர் நரேஷ் பாபு. இவரும் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார் மேலும் நடித்தும் வருகிறார்.இவருக்கு 3 முறை திருமணம் ஆகியுள்ளது. ஏற்கனவே 2 திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் தற்போது மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.மூன்றாவது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையினால் மீண்டும் அவரையும் விவாகரத்து செய்ய இருப்பதாக கூறி விண்ணப்பித்துள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது.60வயது ஆன நரேஷ் பாபு மூன்று மனைவிகளையும் விவாகரத்து செய்து நான்காவது திருமணத்திற்கு ரெடியாகி வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவர் நான்காவதாக பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை திருமணம் செய்ய உள்ளாராம்,இந்த செய்தி அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.ஒரு மனுஷன் எத்தனை கல்யாணம் பண்ணுறது என ரசிகர்களே ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டனர்.மேலும் பவித்ரா லோகேஷும் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆகியவர்தான்.தற்போது மூன்றாவது மனைவி ரம்யாவை முறைப்படி இன்னும் விவாகரத்து இவர் செய்யவில்லை.இந்நிலையில் பவித்ரா உடன் தனியாக நரேஷ் பாபு அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி இருப்பதாக மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் படி அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மேலும் நரேஷ் தன்னை விட்டு பிரிவதற்கு பவித்ரா தான் காரணம் எனவும் தெரிவித்தார்.சம்பவம் குறித்து அறிந்த போலீசை அங்கு வந்து ரம்யாவை சமாதான படுத்த முயன்றனர்.இந்நிலையில் ஒரே வீட்டில் தங்கி இருந்த நரேஷ் மற்றும் பவித்ராவும் வெளியே வரும் பொழுது மனைவி ரம்யா,நரேஷை செருப்பால் அடிக்க முயன்றார்.அதற்குள் போலீசார் அவரை அழைத்து சென்றுவிட்டனர்.தப்பித்த நரேஷ் மனைவியை பார்த்து கேலி செய்யும் விதமாக விசிலடித்து சென்றுள்ளார்.இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி ரசிகர்களிடம் பெரும் முக சுழிவை ஏற்படுத்தியது.நரேஷின் இந்த செயலுக்கு பெண்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்
Embed video credits : Mana telugu
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in