தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
விக்ரம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் படத்தினை இயக்க உள்ளது.இப்படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.விரைவில் அதற்கான அப்டேட் வெளியாகும் என பல முறை அவர் தெரிவித்துள்ளார்.தளபதி படத்தின் பணிக்காக அவர் ட்வீட்டர் விட்டே வெளியே சென்றுவிட்டார்,பட பணிகளில் கவனம் செலுத்த போவதாகவும் இதனால் ட்வீட்டர் பக்கத்தில் வரமாட்டேன் என தெரிவித்து சென்றார்
தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ரசிகருக்காக செய்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.அதன்படி லோகேஷ் தனது ரசிகரின் டீ கடையினை திறந்து வைத்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் லோகேஷின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.பெரிய இயக்குனர் என்ற கர்வம் இல்லாமல் ரசிகரின் டீ கடையினை திறந்துவைத்துள்ளாரே என பலரும் லோகேஷை புகழ்ந்து வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in