நடுரோட்டில் சிக்னலில் வைத்து பெற்ற மகளை ரவுடிகளை வைத்து காரில் கடத்த முயன்ற தந்தை | Viral Video

பொதுவாகவே சினிமாக்களில் காதல் ஜோடிகளை பிரிப்பதும், கடத்தலில் ஈடுபடுவதும் போன்ற காட்சிகள் காட்டப்படும். ஆனால் தற்போது கோயம்புத்தூரில் நேரில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. காதலித்து ஓடி போனதால் தனது மகளையே ரவுடி கும்பலை வைத்து காரில் கடத்த முயன்று இருக்கிறார் ஒரு தந்தை. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. Watch the below video

நடுரோட்டில் சிக்னலில் வைத்து பெற்ற மகளை ரவுடிகளை வைத்து காரில் கடத்த முயன்ற தந்தை | Viral Video 1

விளம்பரம்

கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியைச் நேர்ந்த விக்னேஷ் மற்றும் சினேகா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் ஓடி கோவிலில் வைத்து திருமணம் முடித்துள்ளனர். நான்கு நாட்களுக்கு பிறகு இரவு 8 மணியளவில் இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது லெட்சுமி மில் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்த சிலர் அவர்கள் இருவரையும் காருக்குள் கடத்த முயன்றனர். இருவரும் கத்தி கூச்சலிட்டதால் அங்கு நின்றிருந்த போக்குவரத்து காவலர் உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்தார். Youtube video code embed credits: Polimer News

நடுரோட்டில் சிக்னலில் வைத்து பெற்ற மகளை ரவுடிகளை வைத்து காரில் கடத்த முயன்ற தந்தை | Viral Video 2

விளம்பரம்

அப்போது அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதாகவும், பெண்ணின் தந்தை ரவுடி ஆட்களை வைத்து தங்கள் இருவரையும் காரில் கடத்த முயற்சி செய்வதாகவும் எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று காலில் விழுந்து கெஞ்சினர். ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சிக்னலில் நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியரை காரில் கடந்த முயற்சி செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளானர் இது தற்போது வைரலாகி வருகிறது. திரைப்படங்களில் நடக்கும் கடத்தல் காட்சிகள் போல் உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment