நடிகர் அரவிந்த் சாமி 1991ஆம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரஜினி,மம்மூட்டி நடித்த தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இந்த படத்தின் மூலம் அரவிந்த் சாமியை மக்கள் தனியாக கவனிக்க தொடங்கினர்.அதன்பின்னர் மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தில் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படம் பெரும் வரவேற்பினை பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருமாறினார்.மக்கள் பலரும் நீ என்ன அரவிந்தசாமியோ என்று பிறரை அழகில் கேட்கும் அளவிற்கு பெண்கள் மனம் கவர்ந்த இளைஞனனாக உருமாறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் வரிசையாக நடித்து வெற்றிகளை தன் வசம் வைக்க தொடங்கினார் அரவிந்த்சாமி.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி படங்களிலும் பிசியாக நடிக்க தொடங்கிய வர் இடையில் நீண்ட இடைவெளியை நடிப்பில் இருந்து எடுத்தார்.பின்னர் 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லன் ஆக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தில் பெரும் வரவேற்புக்குள்ளாகியிருந்தார் அரவிந்தசாமி.இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.கதாநாயகன் மற்றும் வில்லன் ஆக அசத்தி வரும் அரவிந்த்சாமி தற்போது கள்ளபார்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்
இந்நிலையில் அரவிந்த்சாமி முதல் முறையாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக உள்ள படம் காந்தி டாக்ஸ். இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்க உள்ளார்.தற்போது இப்படத்தின் சிறிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது
Embed video credits : ZEE STUDIOS
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in