The Indian Times

அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜிபி முத்து?… வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

Advertisement

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்துள்ளார்.தற்போது ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒருவாரம் இருந்த நிலையில் குழந்தைகள்தேட்டமாக இருப்பதாக கூறி வெளியே சென்றார்.

Advertisement

தற்போது இவர் கைது செய்யப்பட்டதை போல புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.இதனை விசாரித்த பொழுது பரோல் படத்திற்காக ப்ரோமோஷனில் ஜிபி முத்து கைது செய்யப்படுவது போல காட்சி எடுக்கப்பட்டுள்ளது.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வதந்திகள் கிளம்பியுள்ளது தெரியவந்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in