தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குன கவுதம் வாசுதேவ் மேனன்.பல முன்னணி கதாநாயகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.விண்ணை தாண்டி வருவாயா படத்தினை இயக்கி பல ரசிகர்களாலும் அறியப்பட்டவர் ஆகினார்.அன்று முதல் இன்று வரை கவுதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.2001 ஆம் ஆண்டு நடிகர் மாதவனை வைத்து மின்னலே படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் தடம் பதித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது நடிகர் சிம்புவை வைத்து இரண்டாவது முறையாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தினை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.கடந்த வாரம் இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.விமர்சனங்கள் ஒரு பக்கம் கலவையாக பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது வெந்து தணிந்தது காடு என்று தான் கூற வேண்டும். அண்மையில் இப்படம் குறித்து இயக்குனர் கவுதம் செய்தி சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்
அப்பொழுது விமர்சகர் BLUESATTAI மாறன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,உடனே கவுதம் மேனன் கடுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டார்.படங்களையும் நடிகர்களையும் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.அவரது விமர்சனமே ஏளனமாக உள்ளது.இதனை பார்க்கும் பொழுது இறங்கி அவரை எதாவது செய்யவேண்டும் போல இருப்பதாக பேசியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.பலரும் தங்களது ஆதரவினை கவுதம் மேனனுக்கு தெரிவித்து வருகின்றனர்
Embed video credits : Thanthi TV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in