இந்தியா -இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் தேம்பி அழுத க்ருனால் பாண்டியா! வைரல் வீடியோ

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச தொடர் இன்று துவங்கி உள்ளது. ஏற்கனவே இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரிலும் இந்தியா 2 க்கு 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி ஆகா வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போது நடந்து வரும் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. டி20 தொடரில் சொதப்பிய துவக்க ஆட்டக்காரராந ஷிக்கர் தவன் இந்த போட்டியில் 98 ரன்களை விளாசி உள்ளார். இதை தொடர்ந்து எப்பவும் போல இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன அரைசதத்தை அடித்தார். அதன் பிறகு களம் இறங்கிய

விளம்பரம்

Watch Another Video Below கே.எல் ராகுல் 62 ரன்களை விளாசினார். அதன் பிறகு களம் இறங்கிய க்ருனால் பாண்டிய பந்தை பறக்க விட்டார். இதுவே அவரது சர்வதேச ஒரு நாள் தொடரின் முதல் போட்டி ஆகும். முதல் போட்டி என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் 31 பந்துகளில் 58 ரன்களை விளாசி உள்ளார். அது மட்டுமில்லாது முதல் சர்வதேச தொடரின் வேகமான அரை சதம் அடித்த பிளேயர் என்ற பெருமையும் பெற்றார். இதனால் மிகவும் சந்தோசப்பட்ட க்ருனால் பாண்டியா அனந்த கண்ணீர் விட்டு அழுதார். அதனோடு போட்டியின் முதல் பாகம் முடிந்ததும் தன் சகோதரர் ஹர்திக் பாண்டியவை கட்டி அணைத்து அழும் வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு இந்திய அணியை சேர்ந்த அணைத்து வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தன் வெற்றியை பார்க்க தன் தந்தை இல்லை என்று அழுத க்ருனால் பாண்டியா, தன் வெற்றியை இறந்து போன தந்தைக்கு சமர்ப்பணம் செய்தார்.

https://twitter.com/Neilby70/status/1374335814734319622

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment