தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது.
மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.மணிரத்தினத்தின் சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது
மணிரத்தினத்தினை கண்டு இயக்குனர் ராஜமவுலி ஆச்சரியப்பட்டதாக ஜெயம் ரவி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் ஜெயம் ரவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பொழுது அவரை பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி சந்தித்துள்ளார்.அப்பொழுது ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் 150 நாட்களில் முடித்து விட்டதாக கூறியுள்ளார்.இதை கேட்டு ராஜமவுலி அதிர்ச்சி அடைந்துள்ளார்.நான் பிராங்க் செய்வதாக நினைத்து அவர் தொடர்ந்து என்னிடம் கேட்டார் நான் 150 நாட்களில் முடித்துவிட்டோம் என்று கூறினேன்,அதிர்ச்சி அடைந்த அவர் எனக்கு பாகுபலி எடுக்க 5 ஆண்டுகள் ஆகியது நீங்கள் எப்படி எடுத்தீர்கள் என ஆச்சரியத்துடன் மணிரத்தினத்திடம் கேட்டு தெரிந்துகொண்டார் என கூறியுள்ளார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in