விஜயை ஐயா என அழைக்க காரணம் என்ன?பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு உலகநாயகன் பதில்

நடிகர் கமல்ஹாசன் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனே இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது.படத்தினை பார்த்த ரசிகர்கள் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் படங்கள் சரியாக ஓடவில்லை அதனை தற்போது விக்ரம் நிவர்த்தி செய்துள்ளது.இறங்கிய தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியுள்ளது விக்ரம் என தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ரம்ஜான் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்

விஜயை ஐயா என அழைக்க காரணம் என்ன?பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு உலகநாயகன் பதில் 1

விளம்பரம்

படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து,கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் 13 துணை இயக்குனர்களுக்கு பைக்குகளை வழங்கியுள்ளார்.இறுதியாக வந்து கலக்கிய சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சினை பரிசாக அளித்துள்ளார்.படத்தின் வெற்றியை கமல்ஹாசன் கொண்டாடி வருகிறார்.மேலும் அடுத்தடுத்து படம் கொடுத்து ரசிகர்களை மகிழ்விக்க ஆரவமாகவும் இருக்கிறார் கமல்ஹாசன் என்று கூறினால் மிகையாகாது.அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார் கமல்ஹாசன்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

விஜயை ஐயா என அழைக்க காரணம் என்ன?பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு உலகநாயகன் பதில் 2

விளம்பரம்

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளிநாட்டில் இருந்தபொழுது,அங்கு விஜய் உடன் எப்பொழுது நடிப்பீர்களா என கேட்டதற்கு கமல் ,விஜய் ஐயா கால்ஷீட் கொடுத்தால் நடிக்கலாம் என கூறியிருந்தார்,இது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது,கமல் எவ்வளவு பெரிய நடிகர் அவர் எப்படி இப்படியெல்லாம் தளபதி விஜய் ஐயா என கூறலாம் என கேள்வி எழுப்பப்பட்டது.இதுகுறித்து அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசனிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது,அது ஒரு மரியாதை நிமித்தமாக விஜயை ஐயா என அழைத்தேன், நடிகர் திலகம் சிவாஜி கூட என்னை , ”கமல் ஐயா அவர்களே”, என்று குறிப்பிடுவார்’ என கூறியுள்ளார்.தற்போது இந்த பதிலுக்கு பிறகு சர்ச்சைக்கு ஓய்வு கிடைக்கும் என நம்ப படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment