ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா…நெகிழ்ச்சி அடைந்து அழுத கன்னிகா

பல அற்புதமான பாடல்களை சினிமாவிற்கு அளித்தவர் சினேகன்.தமிழை உயிர் மூச்சாய் கொண்டு இவர் எழுதும் எல்லா பாடல்களும் பெரும் ஹிட் அடித்து வருகிறது.இவர் எழுதிய பாடல் வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் அந்த அளவிற்கு இவரது பாடல்களை கேட்கும் பொழுது உள் உணர்வு நமக்கு தோன்றும் .இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில்தான்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல்களை எழுதி தான் சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா...நெகிழ்ச்சி அடைந்து அழுத கன்னிகா 1

விளம்பரம்

பாடலாசிரியர் சினேகனுக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் கன்னிகா.அதன்பின்னர் சரித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். சத்ரபதி,தேவராட்டம்,அடுத்தசாட்டை என்று பல படங்களில் நடித்துள்ளார் இவர்.அண்மையில் திருமுருகன் இயக்கத்தில் கல்யாண வீடு தொடரில் கதாநாயகியாக நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்.இருவரும் திருமணத்திற்கு பின்பு மகிழ்ச்சியாக தங்களது வாழ்வினை கொண்டாடி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா...நெகிழ்ச்சி அடைந்து அழுத கன்னிகா 2

விளம்பரம்

சினேகன் மனைவி கன்னிகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு தனது கணவருடன் சென்று அங்கு உள்ளவர்களுடன் கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ,எனது பிறந்தநாளை சிறந்த நாளாக மாற்றிய அனைவர்க்கும் நன்றி என நெகிழ்ந்து கூறியுள்ளார்.இவர் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தும்,இதுபோன்று அனைவருடன் கொண்டாடியதற்கு பாராட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா...நெகிழ்ச்சி அடைந்து அழுத கன்னிகா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment