பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல்களை எழுதி தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகம் ஆகியவர் சினேகன்.இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் முதன் முதலாக தனது பாடல் வரிகளை எழுத தொடங்கிய சினேகன் இந்த பாட்டுகளுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தார்.
இதனை தொடர்ந்து பல முன்னணி தமிழ் நடிகர்களின் படங்ககளுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாய் பாசத்தினை உணர்த்தும்படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.இவர் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை அண்மையில் மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.கன்னிகா மெட்டி ஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிய நாதஸ்வரம் நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் அவ்வப்பொழுது தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோக்களாக்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்,இவர்களின் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.தற்போது சினேகன் மனைவி கன்னிகாவுடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.மனைவியை தூக்கி பேரிக்காய் பறிக்க வைக்க முயன்ற பொழுது அவரை கீழே போட்டுள்ளார்.இந்த வீடியோவை கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in