இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகிய படம் காந்தாரா.இப்படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது படக்குழு இப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்து தமிழகத்தில் ரிலீஸ் செய்துள்ளது.இப்படத்தினை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி இவரே கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.கேஜிஎப் படத்தினை தயாரித்த HOMBALE தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரித்துள்ளது. அஜனீஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சப்தமி கௌடா நடித்துள்ளார்.
இப்படத்தின் கன்னட வெற்றியை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படத்தினை டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது.அணைத்து மொழி மக்களிடம் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இப்படத்தின் வசூலை இரண்டே வாரத்தில் காந்தாரா திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் முந்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஹிந்தியில் 23 கோடியை வசூலித்து இருந்தது அதேபோல் தெலுங்கில் சுமார் 13 கோடி வசூலை பெற்றுள்ளது.இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியாகிய காந்தாரா தெலுங்கில் 30 கோடியையும் ஹிந்தியில் 31 கோடியையும் பெற்று சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in