சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “காந்தாரா” – திரை விமர்சனம் (?/5)

இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகிய படம் காந்தாரா.இப்படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது படக்குழு இப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்து தமிழகத்தில் ரிலீஸ் செய்துள்ளது.இப்படத்தினை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி இவரே கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.கேஜிஎப் படத்தினை தயாரித்த HOMBALE தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரித்துள்ளது. அஜனீஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சப்தமி கௌடா நடித்துள்ளார்.

சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "காந்தாரா" - திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை:

கர்நாடகாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆண்டு வந்த அரசர் நிம்மதியை தேடி பயணம் செய்ய அப்பொழுது அங்கு உள்ள மலைக்கிராம பகுதியை பார்க்கிறார்,அங்குள்ள கற்சிலை ஒன்றை கண்ட உடன் மகிழ்ச்சி அடைகிறார்.இதனால் அந்த மக்களிடம் தனக்கு அந்த கற்சிலையை தரும்படி கோரிக்கை வைக்கிறார்.அதற்கு அந்த கோவில் சாமியாடி ஒருவர் கத்தி சத்தம் போட்டு இந்த சத்தம் எந்த எல்லை வரை சென்றதோ அதுவரை உள்ள நிலங்களை மக்களுக்கு கொடுத்தால் உங்களுக்கு கற்சிலை சொந்தம் என கூறவே மன்னரும் அதனை மக்களுக்கு எழுதி கொடுக்கிறார்.பல வருடங்களுக்கு பிறகு மன்னரின் வாரிசுகள் அந்த இடத்தினை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.கைப்பற்ற முயல்பவர்கள் இறந்தும் போகின்றனர்.மேலும் 1990 மற்றொரு வாரிசான அச்யுத் குமார் மக்களிடம் நல்லவர் போல நடித்து அந்த இடத்தினை கைப்பற்ற முயல்கிறார் ,இவரின் சூழ்ச்சியை அறிந்துகொள்ளும் கதாநாயகன் ரிஷாப் ஷெட்டி மண்ணையும் அங்குள்ள மக்களையும் எப்படி காக்கிறார் என்பதே மீதி படத்தின் கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "காந்தாரா" - திரை விமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

படத்தில் காண்பிக்கப்படும் மலைப்பகுதி,மலைவாசிகள் வாழ்க்கை ஆகியவற்றை தெளிவாக காண்பித்து நம்மை அங்கே அழைத்து சென்றதுபோல உணரவைத்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது.படத்தில் ஒளிப்பதிவு மிக சிறப்பாக அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் முரட்டு இளைஞராக சிவா என்ற கதாபாத்திரத்தில் வருபவர் தான் கதாநாயகன் ரிஷாப் ஷெட்டி.கதாநாயகனுக்கான எல்லா பொருத்தமும் பக்காவாக இவரிடம் அமைந்துள்ளது. வில்லனாக வரும் அச்யுத் குமார் அசத்தியெடுத்துள்ளார் தனது நடிப்பில் ,இவரை தவிர வேறு எவரும் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்திருக்க மாட்டார்கள்.படத்தில் கதாநாயகியின் பங்கு மிக குறைவு ,தேவை என்பதற்காக வைத்துள்ளதாக உணரப்படுகிறது.காவல் அதிகாரியாக வரும் கிஷோர் தன்னிடம் உள்ள சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.இடையில் கதை கொஞ்சம் மெதுவாக ஆனாலும் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தில் மிக அற்புதமாக அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

காந்தாரா படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3.5/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment